தவியாய்த் தவிக்கும் இதயத்தின்
தாகம் தீர்த்திட வந்தவளே
புவிமேல்
உனதருள் இல்லையெனில்
பூவும் பிஞ்சும் தோன்றிடுமா !!
கவியாய்ப்
பொழிவேன் எந்நாளும்
காவல் தெய்வம் நின் புகளை
செவிதான் மகிழ
வாழ்வனைத்தும்
செம் பட்டுடுத்திய அம்மாவே !
மருவத் தூராள்
எனக் கேட்டால்
மலரும் சிரிக்கும் தன்னாலே !
புருவம் வியந்து
பார்த்திடவே
பூமிப் பந்தாய்த் தெரிபவளே
உருவம் உனது உருவமொன்றே
உள்ளக் கதவைத் தட்டுதடி
வருவோர் போவோர் அனைவருக்கும் -நல்
வாழ்வு
அளிக்கும் அம்மாவே ..!!
கொஞ்சும் மழலைக் குரல் கேட்டு
கூட
வருவாய் என் தாயே
நெஞ்சம் இனிக்க நினைவுகளில் -நீ
நித்தம் இருந்தால்
போதுமடி
அஞ்சும் மனநிலை மாறிவிடும்
ஆத்தா உனதருள்
கிட்டிவிட்டால்
தொஞ்சும் போக வழியுண்டோ
தோல்வி எம்மைத் தழுவிடினும்
!
வேப்பிலைக்கு ஈடாக என்றும்
வினைகள் தீர்க்கும்
பராசக்தி
காப்பெடுக்கும் பக்தருக்கு நீ
கருணை பொழியும்
மகாசக்தி !
பாப்புனைய வந்தேனே என்
பகுத்தறிவை வளர்த்து விடு
நாப்புரளும்
போ தெல்லாம்
நல்ல துணை யாபவளே !!
பக்தி கானங்கள்
பிரபலமானவை
ஆன்மீகம்
Banner 180x90

Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்

வகைகள்
ஆலயங்கள்
ஆன்மீகக் கதிர்
சுவிஸ் பேர்ண் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை! 2015
சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 2014
Kathiravan.com

கைகொடுப்போம்
கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி
0 Kommentare:
Kommentar veröffentlichen