கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

மருவத்தூர் அம்மாவே போற்றி போற்றி !

தவியாய்த்  தவிக்கும் இதயத்தின்
        தாகம்  தீர்த்திட வந்தவளே
புவிமேல் உனதருள் இல்லையெனில்
        பூவும் பிஞ்சும் தோன்றிடுமா !!
கவியாய்ப் பொழிவேன் எந்நாளும்
     





காவல் தெய்வம் நின் புகளை
செவிதான் மகிழ வாழ்வனைத்தும்
       செம்      பட்டுடுத்திய அம்மாவே !


மருவத் தூராள் எனக் கேட்டால்
   மலரும்   சிரிக்கும் தன்னாலே !
புருவம்     வியந்து  பார்த்திடவே
   பூமிப்   பந்தாய்த் தெரிபவளே
உருவம் உனது உருவமொன்றே
   உள்ளக் கதவைத் தட்டுதடி
வருவோர் போவோர் அனைவருக்கும் -நல்
   வாழ்வு  அளிக்கும் அம்மாவே ..!!


கொஞ்சும் மழலைக் குரல் கேட்டு
          கூட  வருவாய் என் தாயே
நெஞ்சம்  இனிக்க நினைவுகளில் -நீ
      நித்தம்  இருந்தால் போதுமடி
அஞ்சும்    மனநிலை மாறிவிடும்
    ஆத்தா உனதருள் கிட்டிவிட்டால்
தொஞ்சும் போக வழியுண்டோ
   தோல்வி   எம்மைத் தழுவிடினும் !


வேப்பிலைக்கு ஈடாக என்றும்
  வினைகள்        தீர்க்கும் பராசக்தி
காப்பெடுக்கும் பக்தருக்கு   நீ
  கருணை           பொழியும் மகாசக்தி !
பாப்புனைய வந்தேனே என்
  பகுத்தறிவை வளர்த்து விடு
நாப்புரளும்       போ தெல்லாம்
     நல்ல        துணை யாபவளே !!

Get this gadget at facebook popup like box
09